தமிழருடன் தமிழில் பேச தயக்கம் ஏன்?
இங்குள்ள தமிழர்களும், தமிழர்களைச் சந்திக்கும்போது தமிழில் பேசத் தயங்கக்கூடாது
சிங்கப்பூரிலுள்ள பிற இனமக்கள், தங்கள் இனத்தவருடன் பேசும் போது தங்கள் தாய்மொழியில் பேசுவதையே விரும்புகின்றனர். அதுபோன்று இங்குள்ள தமிழர்களும், தமிழர்களைச் சந்திக்கும்போது தமிழில் பேசத் தயங்கக்கூடாது என்று நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. கார்த்திகேயன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடந்தது நட்சத்திர ஜன்னல் என்னும் நிகழ்ச்சியில் அவர் பேசினார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினர் அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.