கல்வி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் - நமது முன்னோடித் தமிழர்கள் ஆற்றிய பங்கு
யீசூன் தொடக்கக் கல்லூரி, 27-ஆவது பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சிங்கப்பூர்: யீசூன் தொடக்கக் கல்லூரி, 27-ஆவது பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புகளுக்கான தமிழ்மொழி கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூரின் 50ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்களையும், தமிழ் மொழி விழாவையும் முன்னிட்டு, நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நமது முன்னோடித் தமிழர்கள், கல்வி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் முதலிய துறைகளில், நமது அடையாளத்தைக் கட்டிக்காப்பதற்கு ஆற்றியிருக்கும் பங்கை அது நினைவுகூருகிறது. யீசூன் தொடக்கக் கல்லூரி, சிராங்கூன் தொடக்கக் கல்லூரி, ஆண்டர்சன் தொடக்கக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் படைப்புகளை முன்வைக்கிறார்கள்.
கல்வி, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் முதலிய துறைகளில் சாதித்தவர்களுடன், சில கல்லூரி மாணவர்கள், "எது சாதனை? எதிர்காலம் என்ன?" எனும் தலைப்பிலான கலந்துரையாடலிலும் ஈடுபடுகிறார்கள்.