தமிழ் 'டோஸ்மாஸ்டர்ஸ்' - பேச்சுப் போட்டி
தமிழில் அவ்வளவாகப் பேசாத தமிழர்களையும் அதில் பேசவைப்பதுதான் தமிழ்மொழி விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. இரா. தினகரன் கூறியுள்ளார்.
சிங்கப்பூர்: இன்று காலை உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் இடம்பெற்றது நிகழ்ச்சி.
பத்தாண்டாக நடந்துவரும் நிகழ்ச்சி கடந்த ஈராண்டாக பெரிய அளவில் நடைபெற்றுவருகிறது. அதற்கான நோக்கத்தை விவரித்தது ஏற்பாட்டுக் குழு.
தயாரிக்கப்பட்ட பேச்சு, அந்த நேரத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பையொட்டி உடனடியாகப் பேசவேண்டிய அரங்கப் பேச்சு உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன.