கதைசொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பயிலரங்கு(வீடியோ)
தமிழ்மொழி மீதான ஆர்வத்தை இளம் வயதினரிடையே தட்டியெழுப்ப மாறுபட்ட வழிகளை நாம் கையாளலாம்.
தமிழ்மொழி மீதான ஆர்வத்தை இளம் வயதினரிடையே தட்டியெழுப்ப மாறுபட்ட வழிகளை நாம் கையாளலாம்.
கதைசொல்வதும் அவற்றுள் ஒன்று.
கதைசொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் "கற்பித்தலில் கதையும், கதைசொல்லும் திறனும்" என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கு இன்று காலை இடம்பெற்றது.
ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆகியோருக்கான அந்தப் பயிலரங்கு இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்தது.
சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம் அதற்கு ஏற்பாடுசெய்திருந்தது.
பயிலரங்கில் கற்றுக்கொண்டவற்றைத் தங்களுக்கு இடையே பகிர்ந்துகொண்டனர் பங்கேற்பாளர்கள்.