யாருக்கும் ஆதரவில்லை: ஆம் ஆத்மி
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது
சென்னை: தமிழக சட்ட மன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ முயன்று வந்தார். அதன் தொடர்பில் சென்னையில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு அவர் நேரில் சென்றார். ஆனால் அப்போது அங்கு வைகோவிற்கு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கூட்டணிப் பற்றி அக்கட்சியினர் பேச முன்வராததால் வைகோ பாதியிலேயே திரும்பினார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக ஆத் ஆத்மி தலைமையகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தங்கள் கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்கவிரும்பவில்லை என தெரிவித்துள்ளது.