Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலில் அதிமுகவினர் முற்றுகை

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலை அதிமுக ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பிரேமலதா அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வாசிப்புநேரம் -

சேலம்: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தங்கியிருந்த ஹோட்டலை அதிமுக ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி பிரேமலதா அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பிரேமலதா பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருவது அதிமுகவின் தீவிர ஆதரவாளர்கள் பலரிடையே கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் பிரேமலதா தங்கியிருந்த தனியார் ஹோட்டலை இன்று அதிமுகவினர் சிலர் முற்றுகையிட்டனர். பிரேமலதாவிற்கு எதிரான வாசகங்களை அவர்கள் முழக்கமிட ஆரம்பித்தனர். சம்பவ இடத்தில் சிறிது நேரத்திற்கு பதற்றமான சுழல் நிலவியதாகக் கூறப்பட்டது.

பிறகு, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் சொன்னார்கள். அப்போது போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்