Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ஜெயலலிதாவுக்கு எதிராகக் களமிறங்கும் திருநங்கை

எதிர்வரும் தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் அவருக்கு எதிராக மோதப் போகிறார் ஒரு திருநங்கை. தேவி என்ற அந்தத் திருநங்கை சேலத்தைச் சேர்ந்தவர். 2004 முதல் தேவி பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்.

வாசிப்புநேரம் -

சென்னை: எதிர்வரும் தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அம்மாநில முதல்வர் ஜெயலலிதா, ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் அவருக்கு எதிராக மோதப் போகிறார் ஒரு திருநங்கை.

தேவி என்ற அந்தத் திருநங்கை சேலத்தைச் சேர்ந்தவர். 2004 முதல் தேவி பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். வீடில்லாதவர்களுக்காக, ஆதரவற்றோர் இல்லத்தையும் அவர் தொடங்கியுள்ளார். கடந்த மூன்றாண்டுகளாக அவர் 'நாம் தமிழர் கட்சி'யின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியைப் பிரதிநிதித்து தேவி, ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடவிருக்கிறார்.

ஜெயலலிதா, தமிழ்நாட்டிலேயே ஒரு மிகப்பெரிய தலைவர் என்றும் அவரை எதிர்த்து நிற்பது தமது நோக்கமல்ல என்று தேவி கூறினார். மாறாக ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்காக தாம் களத்தில் இறங்குவதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்