தமிழகத் தேர்தல் - வாக்குகளை எண்ணும் நடவடிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அந்த இடங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்தது.
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அந்த இடங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடந்தது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அஞ்சல்வழி செலுத்தப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகள் முதலில் தொடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் 16 தொகுதிகளில் இன்று வாக்குகள் எண்ணப்படும். அந்தப் பணியில் 9, 620-உக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
சற்று முன்னர் நிலவரப்படி,தேர்தல் நடைபெற்ற 232 தொகுதிகளில் அதிமுக, 134இடங்களிலும் திமுக 86 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.