Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேப்டன் இனி பேசமாட்டார்

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி பேசுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். 

வாசிப்புநேரம் -
கேப்டன் இனி பேசமாட்டார்

கேப்டன் விஜயகாந்த்

கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி பேசுகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இதை வைத்தே மற்ற கட்சிகள் அவரை நேரம் கிடைக்கும் போதேல்லாம் கிண்டலடித்து வருகின்றன.

விஜயகாந்துக்கு டிமென்சியா அம்னீசியா நோய் இருப்பதாகவும், அதனால்தான் அவர் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாமல் பேசுகிறார், பேச்சில் தெளிவில்லை, தானாகவே சிரிக்கிறார், தானாக அழுகிறார், தள்ளாடி நடக்கிறார் என்று ஊடகங்கள் கூறி வருகின்றன.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறிய பிரேமலதா, அவருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

விஜயகாந்தின் இந்த செயல்பாடுகளால் அவருக்கு கிடைக்கும் ஓட்டுகளை குறைக்க வாய்ப்புள்ளது என்பதால் விஜயகாந்த் இனி பிரச்சாரங்களில் அதிகம் பேசமாட்டார்.

ஒன்று இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசுவார். மற்ற அனைத்தையும் மக்கள் நலக் கூட்டணியினர் மற்றும் பிரேமலதா ஆகியோர் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்