Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேப்டனிடம் திமுக பேசிய பேரம்

திமுக கூட்டணியில் தேமுதிகவை இடம் பெறச் செய்வதற்காக 80 இடங்கள் ஒதுக்குவதாகவும், ரூ500 கோடி தருவதாகவும் கருணாநிதி கூறியதாக வைகோ பரபரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கேப்டனிடம் திமுக பேசிய பேரம்

வைகோ

திமுக கூட்டணியில் தேமுதிகவை இடம் பெறச் செய்வதற்காக 80 இடங்கள் ஒதுக்குவதாகவும், ரூ500 கோடி தருவதாகவும் கருணாநிதி கூறியதாக வைகோ பரபரப்புத் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் என்ற கூட்டணிக்குச் செல்வார் என்ற எதிர்பாப்பு மிகவும் அதிகமாக நிலவியது.

அப்போது கூட்டணி பேசுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பழம் கனிந்து விட்டது. விரைவில் பாலில் விழும் என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், விஜயகாந்த் திமுக கூட்டணிக்குச் செல்வார் என்றும் அற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும், ஊடகங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது.

ஆனால் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியில் திடீரென்று இணைந்தார். அந்த கூட்டணியில் விஜயகாந்திற்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இந்த தருணத்தில் வைகோ வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்