அதிமுக கூட்டணியில் வாசன்: நாளை அறிவிப்பு
அதிமுக - தமாகா கூட்டணி நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக - தமாகா கூட்டணி நாளைக்குள் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 52 நாட்களே உள்ளன.
நாட்கள் நெருங்குவதால் கூட்டணி அமைப்பதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து புதிய கூட்டணியை ஏற்படுத்தியுள்ளன.
ஆளுங்கட்சியான அதிமுக வுக்கு ஏற்கெனவே 6 கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
தமாகா தலைவர் வாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என அதிமுகவை வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக 10 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் அதிருப்தியில் இருக்கும் வாசனை இழுக்க மக்கள் நலக் கூட்டணி முயற்சித்து வருகிறது. அதன் தொடர்பில் வாசனுடன் விஜயகாந்த் தொடர்ந்து பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
அதனால் தமாகாவுக்கு 16 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும், அது தொடர்பான இணக்கம் நாளை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பார்க்கவும்: