ஸ்பெக்ட்ரம் ஊழலின் நாயகன் ஸ்டாலின்: வைகோ
ஸ்பெக்ட்ரம் ஊழலின் நாயகன் ஸ்டாலின்: வைகோ
திருச்சி: இந்திய மத்திய புலனாய்வுத்துறை (CBI) விசாரணையின் போது, சாஹித் பல்வாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவு பற்றி தகவல் அளித்ததால்தான் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கினார் என்று வைகோ குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
எனவே, '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் பின்னணியில் ஸ்டாலினுக்கு தொடர்பு உள்ளது' என்று அவர் அடித்து கூறியிருக்கிறார்.
'2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கில், கனிமொழி பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் திரைமறைவில் பதுங்கி விட்டார்கள். சாஹித் பல்வா, சென்னைக்கு வந்து, ஸ்டாலினை சந்தித்த போது, என்ன பரிமாற்றம் நடந்தது என்ற வைகோ கேட்டுள்ளார்.
ஸ்டாலினுக்கும், சாஹித் பல்வாவுக்கும் உள்ள உறவை, சி.பி.ஐ. விசாரணையின் போது சொல்லியதால், பெரம்பலுார் சாதிக் பாட்ஷா துாக்கில் தொங்கினார். அவரின் நினைவு நாளில், 'சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என்று, சாதிக் பாட்ஷா குடும்பத்தினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
சாதிக் பாட்ஷா சாவுக்கு, தி.மு.க. தான் காரணம் என்று தாம் கூறுவதாகவும், அதற்காகவும் தம்மீது திமுக வழக்குப் போடலாம் என்று வைகோ கூறியுள்ளார்.