Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேப்டன்தான் ஒரே ஆம்பளை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து, உட்கார் என்று கூறிய ஒரே ஆம்பளை கேப்டன் விஜயகாந்துதான் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
கேப்டன்தான் ஒரே ஆம்பளை

கேப்டன் மனைவி பிரேமலதா

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து, உட்கார் என்று கூறிய ஒரே ஆம்பளை கேப்டன் விஜயகாந்துதான் என்று அவரது மனைவி பிரேமலதா கூறியிருக்கிறார்.

தேமுதிக சார்பில் மதுரையில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

தேமுதிக மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததுதான் தமிழக மக்கள் தற்போதைய பேச்சாக உள்ளது.

இந்த கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று திமுக தரப்பும், பத்திரிக்கைகளும் எதிர்பார்க்கிறது.

ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. கேப்டன் ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருப்பார் என்று பிரேமலதா தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆகும் தகுதி கேப்டனுக்கு இல்லையென்றால், இங்கு யாருக்கு அந்த தகுதி இருக்கிறது என்று கேட்ட பிரேமலதா, அவர் தில்லான முடிவுகளை எப்போதும் எடுப்பார்.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் பார்த்து உட்காருன்னு சொன்ன ஒரே ஆம்பளை கேப்டன்தான என்று ஆவேசமாக கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்