Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கேப்டனுடன் கூட்டணி இல்லை: திருமா

தேமுதிகவுடன் கூட்டணி இல்லை, வெறும் தொகுதி பங்கீடு மட்டுமே என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் திருமாவளவன்.

வாசிப்புநேரம் -
கேப்டனுடன் கூட்டணி இல்லை: திருமா

திருமாவளவன்

தேமுதிகவுடன் கூட்டணி இல்லை, வெறும் தொகுதி பங்கீடு மட்டுமே என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் திருமாவளவன்.

விடுதலை சிறுத்தை நிறுவனரும், மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான திருமாவளவன் நேற்று நாகர்கோவிலில் பொதுக் கூட்டத்தில் பேசினார்.

தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து பிறகு, இரு கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் அது.

அந்த கூட்டத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அதில் பேசிய திருமாவளவன் , தேமுதிகவுடன் கூட்டணி இல்லை. மாறாக தொகுதி பங்கீடுதான் வைத்திருக்கிறோம், என்று கூறினார்.
இது தேமுதிகவைச் சேர்ந்தவர்களை குழப்பமடைய செய்துள்ளது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்