2034 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை சிங்கப்பூர் ஏற்றுநடத்துமா?
சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து நாடுகள், 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்றுநடத்தக் கூட்டாகப் போட்டியிடத் திட்டமிடுகின்றன.
சிங்கப்பூர் உள்ளிட்ட ஐந்து நாடுகள், 2034ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்றுநடத்தக் கூட்டாகப் போட்டியிடத் திட்டமிடுகின்றன.
மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து, வியட்நாம் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் அதற்கான முயற்சியை மேற்கொள்கிறது.
முயற்சி வெற்றிபெற்றால், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆசியாவில் இரண்டாவது முறையாக இடம்பெறும்.
இதற்கு முன்னர் 2002ஆம் ஆண்டில் ஜப்பானும், தென் கொரியாவும் அதனைக் கூட்டாக ஏற்றுநடத்தின.