இளையர்களுக்கான உலகக் கிண்ண வாள் போட்டி - சிங்கப்பூருக்குச் சாதனை
சிங்கப்பூரைச் சேர்ந்த வாள் போட்டி வீரர் அமிதா பெர்த்தியர்,இளையர்களுக்கான உலகக் கிண்ண வாள் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த வாள் போட்டி வீரர் அமிதா பெர்த்தியர்,இளையர்களுக்கான உலகக் கிண்ண வாள் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.
நேற்று, குவட்டாமாலாவில் நடந்த ஜூனியர் உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் 16 வயது அமிதா, மெக்சிக்கோவிவைச் சேர்ந்த 19 வயது லிடியா கசிலாஸிடம் 15-11 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.
போட்டியின் தனிநபர் அங்கத்தில் பதக்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற சாதனையை அமிதா படைத்திருக்கிறார். இவ்வாண்டின் தென்கிழக்காசியப் போட்டியில் தங்க விருதினை அவர் வென்றது குறிப்பிடத்தக்கது.