Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மரியா ஷரபோவா மீது இந்திய காவல்துறை விசாரணை

முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை மரியா ஷரபோவா மீது இந்தியக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மரியா ஷரபோவா மீது இந்திய காவல்துறை விசாரணை

(படம்: AFP/Sajjad Hussain)

முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை மரியா ஷரபோவா மீது இந்தியக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

மோசடி, குற்றவியல் சதி போன்ற குற்றங்களின் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

ஷரபோவாவைக் கொண்டு விளம்பரம் செய்யப்பட்ட சொகுசுக் குடியிருப்புத் திட்டம் ஒன்று செல்லுபடியாகாமல் போனதை அடுத்து, விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்தக் குடியிருப்புத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னரே, அதில் வீடு வாங்க ஆர்வம் காட்டியவர்களிடம் இருந்து, சொத்து மேம்பாட்டு நிறுவனம் பல மில்லியன் டாலர் தொகையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு நிறுவனத்தின் பொருள் அல்லது சேவையை விளம்பரப்படுத்தும் பிரபலம், அந்நிறுவனத்தின் முகவராகச் செயல்படுபவர் என்று அந்தத் திட்டத்தில் வீடு வாங்கவிருந்த ஒருவரின் வழக்கறிஞர் கூறினார்.

அந்த வழக்கு குறித்து டென்னிஸ் நட்சத்திரம் ஷரபோவா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்