ஆர்சனல் குழுவிலிருந்து விலகுகிறார் நிர்வாகி ஆர்சீன் வெங்கர்
ஆர்சனல் நிர்வாகி ஆர்சீன் வெங்கர் நடப்புக் காற்பந்தாட்டப் பருவத்தின் முடிவில் அக்குழுவிலிருந்து விலகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்சனல் நிர்வாகி ஆர்சீன் வெங்கர் நடப்புக் காற்பந்தாட்டப் பருவத்தின் முடிவில் அக்குழுவிலிருந்து விலகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இன்று அத்தகவலை வெளியிட்ட அவர், குழுவுடன் கலந்துரையாடி நன்கு யோசித்த பின் இம்முடிவை எடுத்ததாகக் கூறினார்.
இத்தனை காலம் தாம் பணியாற்றிய ஆர்சனல் குழுவுக்குத் தமது நன்றியை அவர் தெரிவித்துக்கொண்டார்.
பிரிமியர் லீக் பட்டியலில் ஆர்சனல் தற்போது ஆறாம் நிலையில் உள்ளது.
யூரோப்பா லீகில் அரையிறுதிச் சுற்றுக்கு அது முன்னேறியுள்ளது.
அரையிறுதியில் அது அட்லெட்டிக்கோ மாட்ரிட்டைச் சந்திக்க உள்ளது.