Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியா: தனிமைப்படுத்தல் நடைமுறைக்குப் பிறகு களமிறங்கும் டென்னிஸ் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் போட்டிகளுக்காகத் தற்போது தயராகி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: தனிமைப்படுத்தல் நடைமுறைக்குப் பிறகு களமிறங்கும் டென்னிஸ் வீரர்கள்

(படம்: Reuters/Thomas Peter)

ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட பெரும்பாலான டென்னிஸ் வீரர்கள் போட்டிகளுக்காகத் தற்போது தயராகி வருகின்றனர்.

ஆஸ்திரேலியப் பொதுவிருதில் கலந்து கொள்ளவிருக்கும் வீரர்கள், நடுவர்கள் உட்பட சுமார் 1,000 பேர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டோர் நேற்று நள்ளிரவுக்குள் தனிமைப்படுத்தும் இடங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

15 பேர் இன்னும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களில் 3 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

பொதுவிருது டென்னிஸ் போட்டியைப் பாதுகாப்பாக நடத்த ஏற்பாட்டுக் குழுவினரும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.

பிப்ரவரி 8ஆம் தேதி பொதுவிருதுப் போட்டி தொடங்குகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்