Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியா : தனிமைப்படுத்துதலைக் குறைகூறிய விளையாட்டாளருக்கு COVID-19

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள வந்த விளையாட்டாளர் ஒருவருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்க டென்னிஸ் பொதுவிருதுப் போட்டியில் கலந்துகொள்ள வந்த விளையாட்டாளர் ஒருவருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் ஸ்பெயினைச் சேர்ந்த பவ்லா படோஸா (Paula Badosa).

ஆஸ்திரேலியாவின் தனிமைப்படுத்தும் விதிகள் பற்றிக் கடுமையாகக் குறைகூறியவர்களில் படோஸாவும் ஒருவர்.

உடல்நலம் சரியில்லாததால் நேற்று மெல்பர்னில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது, அதைக் குறைகூறியதற்கு மன்னிக்கவும் என்று 23 வயது படோஸா Twitter பதிவு மூலம் வருத்தம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா பொதுவிருதில் கலந்துகொள்ள வந்த 72 விளையாட்டாளர்களில் இதுவரை 4 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போட்டி திட்டமிட்டப்படி பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்