Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிகளில் 30,000 பார்வையாளர்கள்

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கின்றன.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிகளில் 30,000 பார்வையாளர்கள்

(படம்: REUTERS/Sandra Sanders)

ஆஸ்திரேலியப் பொது விருது டென்னிஸ் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கின்றன.

அதன் முதற்கட்ட ஆட்டங்களைக் கண்டு ரசிக்க 30,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

எனினும், கடைசி 5 நாள்களில் இடம்பெறும் ஆட்டங்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை 25,000க்குக் குறைக்கப்படும்.

விக்டோரியா மாநிலத்தின், ரொட் லவெர் (Rod Laver) அரங்கில் அந்தப் போட்டிகள் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளன.

போட்டிகளுக்கு மொத்தம் 390,000 ரசிகர்களை எதிர்பார்ப்பதாக அந்த மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் மார்டின் பக்குலா (Martin Pakula) தெரிவித்தார்.

அது, கடந்த ஆண்டு வருகையளித்தோரின் எண்ணிக்கையில் பாதி மட்டுமே.

விக்டோரியா மாநிலத்தில் கடந்த 24 நாள்களில் உள்ளூர் அளவில் COVID-19 நோய்ச் சம்பவம் ஏதும் பதிவாகவில்லை.

விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் என போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்ற 1,000க்கும் மேற்பட்டோர் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 8 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்