நெய்மார் மீதான பாலியல் வழக்கை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுகோள்
பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு வழக்குரைஞர்கள் நீதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு வழக்குரைஞர்கள் நீதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காவல்துறையிடம் வழக்கு தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று நெய்மாரின் வழக்குரைஞர்கள் கூறினர்.
கடந்த ஜூன் மாதம் நெய்மார் தம்மைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் அந்தப் பெண் முன்வைத்த குற்றச்சாட்டை நெய்மார் மறுத்தார்.
அந்தச் சம்பவம் தொடர்பாக நெய்மார் சமூக ஊடகங்கள் வழி தம்மைத் தற்காத்துப் பேசி வந்தார்.
காற்பந்தைப் போற்றும் பிரேசிலில் நெய்மார் விவகாரம் பரவலாகப் பேசப்படும், கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.