செல்சி காற்பந்து அணி விளையாட்டாளர்கள் சிலருக்கு COVID-19 நோய்த்தொற்று
செல்சி காற்பந்து அணி விளையாட்டாளர்கள் சிலருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செல்சி காற்பந்து அணி விளையாட்டாளர்கள் சிலருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் விளையாட்டுப் பருவத்திற்கு முன் நடக்கும் பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை என்று ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் சுட்டியது.
அணியின் எந்தெந்த விளையாட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
கிருமித்தொற்று உள்ளது என்று உறுதிசெய்யப்படும் ஆட்டக்காரர்கள் 10 நாள் தனிமைப்படுத்திக்கொள்வதுடன், கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவுகளைக் காட்டிய பின்னர் மட்டுமே மீண்டும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
செஃப்ஃபீல்ட் யுனைட்டட் (Sheffield United), பிரைட்டன் (Brighton & Hove Albion), வெஸ்ட் ஹேம் யுனைட்டட் (West Ham United ) ஆகிய பிரிமியர் லீக் அணிகளின் விளையாட்டாளர்கள் சிலருக்கும் நோய்த்தொற்று இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவித்தன.