Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur) அயேக்ஸ் (Ajax) அணியை 3 - 2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வாசிப்புநேரம் -
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

(படம்: Adrian DENNIS/AFP)

சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்று அரையிறுதி ஆட்டத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (Tottenham Hotspur) அயேக்ஸ் (Ajax) அணியை 3 - 2 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல் புகுத்தி முன்னிலை வகித்தது அயேக்ஸ்.

இரண்டாம் பாதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டாட்டன்ஹாம் அணியினர் மூன்று கோல் புகுத்தி ஆட்டத்தைத் தம்வசப்படுத்தினர்.

இரு அணிகளுக்கும் இடையே நடந்த அரையிறுதிச் சுற்று ஆட்டங்களில், இரண்டு அணிகளும் 3 -3 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை வகித்தன.

ஆனால் சொந்த மண்ணுக்கு வெளியே புகுத்திய கோல்கள் எனும் விதியின் அடிப்படையில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அடுத்த மாதம் முதல் தேதி மட்ரிட்டில் நடக்கும் இறுதிச் சுற்றில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் இங்கிலாந்தின் மற்றோர் அணியான லிவர்ப்பூலைச் சந்திக்கிறது.




விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்