Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

முடக்கநிலையில் பருமனாகியதாகக் கிரிக்கெட் வீரர்களைக் குறைகூறும் ரசிகர்கள்

இந்தியக் கிரிக்கெட் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings)  விளையாட்டாளர்கள் முடக்கநிலையில் பருமனாகியதாக ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
முடக்கநிலையில் பருமனாகியதாகக் கிரிக்கெட் வீரர்களைக் குறைகூறும் ரசிகர்கள்

(கோப்புப் படம்: AFP)

இந்தியக் கிரிக்கெட் லீக்கின் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) விளையாட்டாளர்கள் முடக்கநிலையில் பருமனாகியதாக ரசிகர்கள் குறைகூறியுள்ளனர்.

அபு தாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் பொருதின. ஆறு மாத முடக்கநிலைக்குப் பின்னர்
முதன்முறையாக விளையாட்டரங்கிற்குத் திரும்பினர் விளையாட்டாளர்கள்.

நோய்ப்பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட Twenty20 போட்டிகள் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு மாற்றப்பட்டன. ஆட்டத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

முன்னணி விளையாட்டாளர்கள் ரோஹித் ஷர்மா, சௌரப் திவாரி, பியுஷ் சாவ்லா போன்றவர்களின் இடை அளவு அதிகரித்ததைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்று AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களில் விளையாட்டாளர்களின் எடையைச் சிலர் கேலி செய்தனர்.

எனினும், ஓராண்டுக்குப் பின் மீண்டும் விளையாட்டிற்குத் திரும்பும் விளையாட்டாளர் மஹேந்திர சிங் தோணியின் கட்டுடலை ரசிகர்கள் பாராட்டினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்