சூறாவளி அபாயத்தை முன்னிட்டு ஒலிம்பிக் போட்டிகளில் சில மாற்றங்கள்
ஜப்பான் தலைநகர் தோக்கியோவை நோக்கி சூறாவளி ஒன்று சென்றுகொண்டிருப்பதால், ஒலிம்பிக் போட்டிகளில், சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவை நோக்கி சூறாவளி ஒன்று சென்றுகொண்டிருப்பதால், ஒலிம்பிக் போட்டிகளில், சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
நாளை மாறுநாளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள, படகோட்டப் போட்டிகள், நாளை நடைபெறும்.
நேபார்டாக் (Nepartak) சூறாவளி, வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை தோக்கியோவைக் கடந்துசெல்லலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அது கனத்த மழையையும் பலத்தகாற்றையும் கொண்டுவரலாம் என ஜப்பானிய வானிலை ஆய்வகம் முன்னுரைத்திருக்கிறது.