இந்தியப் பிரிமியர் லீக் 2021 ஆட்டங்களில் சென்னைக்குத் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்திய டோனி
கிரிக்கெட் வீரர் MS டோனி, அடுத்த ஆண்டுக்கான இந்தியப் பிரிமியர் லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் MS டோனி, அடுத்த ஆண்டுக்கான இந்தியப் பிரிமியர் லீக் ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் இறுதி ஆட்டமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
அனைத்துலகக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியிருந்த அவர், இந்தியப் பிரிமியர் லீக் ஆட்டங்களில் சிரமங்களை எதிர்நோக்கினார்.
குழுக்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெறவில்லை.
இந்தியப் பிரிமியர் லீக் ஆட்டங்களில் அவ்வாறு நேர்வது, இதுவே முதல்முறை.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இந்தியப் பிரிமியர் லீக் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முந்திய ஆட்டங்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ளன.
இறுதியாட்டம் இம்மாதம் 10-ஆம் தேதி நடைபெறும்.