'இனி, நான் ஓய்வுபெற்றுள்ளதாகக் கருதுங்கள்': கிரிக்கெட் நட்சத்திரம் MS தோனி
அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் MS தோனி தம்முடைய Instagram பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அனைத்துலக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக இந்திய கிரிக்கெட் வீரர் MS தோனி தம்முடைய Instagram பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுவரை, உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. இனி, நான் ஓய்வுபெற்று விட்டதாகக் கருதுங்கள்.
என்ற வாக்கியங்களுடன், கிரிக்கெட்டில் தாம் புரிந்த முக்கியச் சாதனைகளைக் காட்டும் காணொளியையும் பதிவேற்றியுள்ளார்.
அவர் எல்லா விதமான கிரிக்கெட் விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வு பெறுகிறாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், Indian Premier League ஆட்டங்களில் அவர் Chennai Super Kings அணியைத் தொடர்ந்து வழிநடத்துவார் அன்று அதன் தலைமை நிர்வாகி, காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
Indian Premier League ஆட்டங்கள் அடுத்த மாதம், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெறவுள்ளன.
39 வயது தோனி, ஆக அதிகமான வெற்றிகளைக் குவித்த இந்திய கிரிக்கெட் அணித் தலைவராகக் கருதப்படுகிறார்.
உலகக் கிண்ணம், T20 உலகக் கிண்ணம், Champions கிண்ணம் ஆகிய போட்டிகளில், அவர் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார்.
அணித் தலைவராக, ஆக அதிகமாய் 332 அனைத்துலக ஆட்டங்களில் பங்கேற்ற பெருமையும் தோனிக்கு உண்டு.