காமன்வெல்த் போட்டிகளில் பங்கெடுக்கச் சில விளையாட்டாளர்களுக்குத் தடை
அந்தப் போட்டியாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதாகச் சோதனையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்வதிலிருந்து 3 ஆஸ்திரேலியப் போட்டியாளர்களும் மற்ற சில போட்டியாளர்களும் விலக்கப்பட்டுள்ளனர்.
அந்தப் போட்டியாளர்கள் ஊக்க மருந்து உட்கொண்டதாகச் சோதனையில் தெரிய வந்ததைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
2,600 உள்ளூர் போட்டியாளர்களிடமும், 500 வெளிநாட்டுப் போட்டியாளர்களிடமும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை ஊக்க மருந்து எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊக்க மருந்து உட்கொண்ட போட்டியாளர்கள் விளையாட்டுகளுக்கு வருவதற்கு முன்பே அவர்களைப் போட்டியிலிருந்து விலக்க அந்தச் சோதனைகள் உதவியதாக ஆணையம் சொன்னது.