Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

16,000 ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய யூரோ 2020 காற்பந்துப் போட்டி

16,000 ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கிய யூரோ 2020 காற்பந்துப் போட்டி

வாசிப்புநேரம் -

யூரோ 2020 காற்பந்துப் போட்டி இன்று அதிகாலையில் தொடங்கியது.

இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையே நடைபெற்ற முதல் ஆட்டத்தில், 3-0 எனும் கோல் கணக்கில் இத்தாலி வெற்றியடைந்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் மூன்று கோல்களும் புகுத்தப்பட்டன.

கடந்த 5 ஆண்டுகளில் இத்தாலி பங்கெடுக்கும் முதல் முக்கியப் போட்டி இது.

2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற அது தவறியது.

இத்தாலித் தலைநகர் ரோமில் உள்ள Stadio Olimpico அரங்கில் 16,000 ரசிகர்களுக்கு இடையே ஆட்டம் நடைபெற்றது.

கடந்த ஆண்டு நடக்க வேண்டிய யூரோ 2020 காற்பந்துப் போட்டி COVID-19 நோய்த்தொற்று காரணமாக, இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த ஒரு மாதத்தில், 24 நாடுகளைச் சேர்ந்த காற்பந்துக் குழுக்கள், 51 ஆட்டங்களில் கலந்துகொள்ளவிருக்கின்றன.

11 நாடுகளில் போட்டி நடைபெறும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்