தாய்லந்தில் 2 மாதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் காற்பந்து விளையாட்டாளர் விடுதலை
தாய்லந்தில் 2 மாதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் காற்பந்து விளையாட்டாளர் ஹக்கீம் அல் அரைபி (Hakeem Al Araibi) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தாய்லந்தில் 2 மாதமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த பஹ்ரைன் காற்பந்து விளையாட்டாளர் ஹக்கீம் அல் அரைபி (Hakeem Al Araibi) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், விடுமுறைப் பயணம் மேற்கொண்டு பேங்காக் சென்ற ஹக்கீமைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி பஹ்ரைன் கேட்டுக்கொண்டதையடுத்து, அவர் தாய்லந்தில் தடுத்துவைக்கப்பட்டார்.
பின்னர் பஹ்ரைன் தனது நடவடிக்கைகளைக் கைவிட்டது.
25 வயது ஹக்கீம், தற்போது ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் பெறும் பொருட்டு அங்கு செல்கிறார்.
ஆஸ்திரேலியா அவரை அகதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.