Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கணவனையும் மகளையும் இழந்து துக்கத்தில் துவண்டு போயிருக்கும் கூடைப்பந்து வீரர் கோபி பிராயன்டின் மனைவி

மாண்ட கூடைப்பந்துப் பிரபலம் கோபி பிராயன்டின் மனைவி, அவருடைய இழப்பு தம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -


மாண்ட கூடைப்பந்துப் பிரபலம் கோபி பிராயன்டின் மனைவி, அவருடைய இழப்பு தம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியிருப்பதாகக் கூறியுள்ளார்.

கணவர் கோபி பிராயன்டையும் 13 வயது மகள் ஜியானாவையும் ஒரே ஹெலிகாப்டர் விபத்தில் இழந்தார் வனெசா பிராயன்ட்.

மூன்று நாள்களுக்கு முன் நடந்த விபத்தைப் பற்றி முதல்முறையாக அவர் பேசியிருக்கிறார்.

Instagramஇல் குடும்பப் படம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார் வனெசா.

அத்துடன் தமது கணவர், மகள் இருவருடைய மரணத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்.

மகளுடைய கூடைப்பந்து போட்டிக்காகத் தந்தை கோபி பிராயன்ட் அவருடன் ஹெலிகாப்டரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

ஹெலிஹாப்டர் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த அனைவரும் மாண்டனர்.

வனெசா, 'மோசமான' இச்சூழ்நிலையில் தங்கள் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த மில்லியன்கணக்கான மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

விபத்தில் மாண்ட மற்றவர்களின் குடும்பத்துக்கும் தம்முடைய அனுதாபத்தைத் தெரிவித்துகொண்டார் அவர்.

கோபி பிராயன்ட், அவரது மகள் ஆகியோரின் இறுதிச்சடங்கு குறித்த விவரங்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்