Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து : தனது ஊழியர் மீது ரசிகர் ஒருவர் எச்சில் உமிழ்ந்ததாக மென்செஸ்ட்டர் சிட்டி அணி புகார்

காற்பந்து : தனது ஊழியர் மீது ரசிகர் ஒருவர் எச்சில் உமிழ்ந்ததாக மென்செஸ்ட்டர் சிட்டி அணி புகார்

வாசிப்புநேரம் -
காற்பந்து : தனது ஊழியர் மீது ரசிகர் ஒருவர் எச்சில் உமிழ்ந்ததாக மென்செஸ்ட்டர் சிட்டி அணி புகார்

படம்: REUTERS

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் நேற்று மென்செஸ்ட்டர் சிட்டி (Manchester City) அணியும் லிவர்ப்பூல் (Liverpool) அணியும் சந்தித்துக் கொண்டன.

Anfield விளையாட்டரங்கில் நடந்த அந்த ஆட்டம் 2 -2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டம் முடிந்த பிறகு தனது அணி ஊழியர் மீது ரசிகர் ஒருவர் எச்சில் உமிழ்ந்ததாக மென்செஸ்ட்டர் சிட்டி புகார் கொடுத்தது.

அதைத்தொடர்ந்து லிவர்ப்பூல் அணி சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக Sky Sports தகவல் வெளியிட்டுள்ளது.

எச்சில் உமிழ்ந்த சம்பவம் குறித்து தமக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்படவில்லை என்றும் சிறது நேரத்திற்குப் பிறகு தான் அந்த விவரம் தமக்கு தெரியவந்ததாகவும் சிட்டி அணியின் நிர்வாகி பெப் கார்டியோலா (Pep Guardiola) கூறினார்.

எச்சில் உமிழ்ந்த சம்பவம் உண்மையாக இருந்தால் குற்றம் செய்தவர் மீது லிவர்ப்பூல் தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்