மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் காற்பந்துப் பிரபலம் மரடோனா
அர்ஜென்ட்டினாவின் பிரபல காற்பந்து வீரர் டியேகோ மரடோனா (Diego Maradona)அறுவைச் சிகிச்சைக்காக போனஸ் அயர்ஸில் (Buenos Aires) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜென்ட்டினாவின் பிரபல காற்பந்து வீரர் டியேகோ மரடோனா (Diego Maradona)அறுவைச் சிகிச்சைக்காக போனஸ் அயர்ஸில் (Buenos Aires) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூளையில் ஏற்பட்டுள்ள ரத்தக் கட்டியை அகற்றுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாய் அவரின்
மருத்துவர் தெரிவித்தார்.
ரத்தக் கட்டி, மூளையில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை உடனடியாக அகற்றவேண்டும்.
ரத்த சோகை, நீரிழப்பு பிரச்சினைகளுக்காக மரடோனா சென்ற திங்கட்கிழமை மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
1986ஆம் ஆண்டில் அர்ஜென்ட்டினாவுக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த பெருமை மரடோனாவைச் சேரும்.