100ஆவது கோலைப் புகுத்தியிருக்கும் மெஸ்ஸி!
62 நிமிடங்களில் இரண்டாவது கோலைப் போட்டு மெஸ்ஸி காற்பந்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்!
பார்சிலோனா அணிக்கும் செல்சி அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் மூன்றுக்குப் பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றிபெற்றது.
அந்த ஆட்டத்தில் பார்சிலோனாவின் விளையாட்டாளர் லையோனல் மெஸ்ஸி இரண்டு கோல்களைப் புகுத்தினார்.
ஐரோப்பியப் பிரிமியர் ஆட்டங்களில் இதுவரை 117 கோல்களைப் புகுத்தியுள்ள விளையாட்டாளர் கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பிறகு மெஸ்ஸியே ஆக அதிகக் கோல்களுக்குச் சொந்தக்காரர்.
கடந்த வார இறுதியில் மெஸ்ஸிக்கு மூன்றாவது பிள்ளை பிறந்ததை அடுத்து அவர் விளையாடும் ஆட்டம் இது.
62 நிமிடங்களில் இரண்டாவது கோலைப் போட்டு மெஸ்ஸி காற்பந்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்!