மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ள காற்பந்து வீரர் நெய்மார்
பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளர்.
பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளர்.
வரி ஏய்ப்பு தொடர்பாக நெய்மாருக்குச் சொந்தமான 36 சொத்துக்கள் பிரேசில் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நெய்மார் சுமார் 17.5 மில்லியன் டாலர் வரியாகக் கட்ட வேண்டும் என்றும், அந்தத் தொகை 2013ஆம் ஆண்டு அவர் சாண்ட்டோஸ் அணியிலிருந்து பார்சலோனா அணிக்கு மாற்றப்பட்டது தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
சொத்து முடக்கம் தொடர்பாக நெய்மார் தரப்பில் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
அண்மையில் நெய்மார் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அந்த குற்றச்சாட்டால் நெய்மாரின் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட்டன.