பெண்ணை மானபங்கம் செய்ததாக நேமார் மீது குற்றச்சாட்டு
காற்பந்து வீரர் நேமார் பெண்ணை மானபங்கம் செய்ததாகக் குற்றச்சாட்டு
பிரேசிலின் பிரபல காற்பந்து விளையாட்டாளர் நேமார் (Neymar) பாரிஸில், மாது ஒருவரை மானபங்கம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சாவ் பாலோ காவல்துறையின் அறிக்கையைச் சுட்டி, பல்வேறு ஊடகங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.
27 வயது நேமார் ஹோட்டல் ஒன்றில் தன்னை மானபங்கப்படுத்தியதாக அந்த மாது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
நேமார் தரப்பு அதன் தொடர்பில் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
பிரேசிலின் தேசியக் காற்பந்து அணித் தலைவராக இருந்த நேமார், ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகள் காரணமாக சென்ற மாதம் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.