காற்பந்து : பார்சலோனா அணியில் மீண்டும் நெய்மார்?
காற்பந்து விளையாட்டில் பலம்வாய்ந்த அணியாக திகழும் பார்சலோனா நட்சத்திர வீரர் நெய்மாரை மீண்டும் சேர்த்து கொள்ளத் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காற்பந்து விளையாட்டில் பலம்வாய்ந்த அணியாக திகழும் பார்சலோனா நட்சத்திர வீரர் நெய்மாரை மீண்டும் சேர்த்து கொள்ளத் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெய்மாரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள பார்சலோனா வீரர்கள் விரும்புகின்றனர். அவருக்காகத் தங்கள் சம்பளத்தைத் தாமதமாகப் பெற்றுக்கொள்ளவும் பார்சலோனா அணி வீரர்கள் முன்வந்துள்ளனர்.
பார்சலோனா அணியில் விளையாடிய நெய்மார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 222 மில்லியன் யூரோவுக்கு பிரான்ஸின் PSG அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதனால் நெய்மாரை மீண்டும் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றால் பெரும் தொகை தேவைப்படலாம் என்று நம்பப்படுகிறது.