தோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 3 வீரர்களுக்கு நோய்த்தொற்று
தோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், மூன்று வீரர்களுக்குக் COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில், மூன்று வீரர்களுக்குக் COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அங்கு முதன்முறை ஒருவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
ஒலிம்பிக் கிராமத்தில், சுமார் 6,700 வீரர்களும், அதிகாரிகளும் தங்கும் வசதி உண்டு.
அங்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், ஒலிம்பிக் போட்டி ஜப்பானில் புதிய கிருமிப்பரவலைக் கொண்டு வந்துவிடுமோ என்ற கவலை அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் கிராமத்துக்கு அப்பால், தென் கொரியாவைச் சேர்ந்த அனைத்துலக ஒலிம்பிக் குழு உறுப்பினருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
தோக்கியோ சென்று சேர்ந்ததும் நேற்று அவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
ஒலிம்பிக் போட்டி தொடர்புடைய, 12 பேருக்கு இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருமிப்பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நிலைமை மோசமானால் அதைச் சமாளிக்க,தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
தோக்கியோவில், கடந்த 4 நாளில், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் போட்டி தொடங்கவுள்ளது.