2032 ஒலிம்பிக் போட்டிகளில், முக்குளிப்பில், பதக்கம் வெல்வது சிங்கப்பூரின் இலக்கு
பிரிஸ்பேனில் (Brisbane) 2032ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில், முக்குளிப்பில், பதக்கம் வெல்ல சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
பிரிஸ்பேனில் (Brisbane) 2032ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில், முக்குளிப்பில், பதக்கம் வெல்ல சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
அதற்கான பயிற்சிகளில் இப்போதே சிறு பிள்ளைகள் ஈடுபட்டுள்ளனர்.
2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) ஒலிம்பிக் போட்டிகளில் குறைந்தது 4 முக்குளிப்பாளர்களை களமிறக்க, சிங்கப்பூர் நீச்சல் சங்கம் திட்டமிட்டிருக்கிறது.
இம்முறை தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், சிங்கப்பூர் முக்குளிப்பாளர்கள் இருவர் முதல்முறையாகப் போட்டியிடுகின்றனர்.
தென் கிழக்காசிய விளையாட்டுகளிலும், ஆசிய விளையாட்டுகளிலும் தொடர்ந்து முக்குளிப்புப் போட்டிகளில் பதக்கங்களை வெல்ல சிங்கப்பூர் அணி இலக்கு கொண்டிருக்கிறது.