'ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அனைவரையும் திருப்திப்படுத்தாது'
'ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அனைவரையும் திருப்திப்படுத்தாது'
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேதி மாற்றம் எல்லாத் தரப்பினருக்கும் மகிழ்ச்சியளிக்காது என்று உலகத் தடகள சம்மேளனத் தலைவர் செபாஸ்டியன் கோ தெரிவித்துள்ளார்.
எல்லா விளையாட்டுகளிலும் அவற்றுக்குரிய சவால்கள் இருக்கும்; சில விளையாட்டுகளைச் சில காலக்கட்டத்தில் நடத்த முடியாது என்றார் அவர்.
அதனால் சில விளையாட்டுகளுக்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யமுடியாமல் போகலாம் என்றார் திரு. செபாஸ்டியன்.
தற்போது எழுந்துள்ள COVID-19 கிருமித்தொற்றுப் பிரச்சினையால் இந்த ஆண்டு நடைபெறவேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
போட்டிக்கான தேதிகள் இன்னும் தெளிவாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் அது 2021ஆம் ஆண்டு கோடைக் காலத்திற்குள் நடத்தப்படும் என்று அனைத்துலக ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான தேதிகளைப் பொறுத்துத்தான் மற்ற போட்டிகளின் தேதிகளை முடிவுசெய்ய முடியும் என்றார் திரு. செபாஸ்டியன்.