Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மீண்டும் ஏற்றப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் சுடர்

மீண்டும் ஏற்றப்பட்ட தோக்கியோ ஒலிம்பிக் சுடர்

வாசிப்புநேரம் -

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான சுடர் இன்று ஏற்றப்பட்டுள்ளது.

மிகவும் எளிமையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் "தோக்கியோ ஒலிம்பிக் போட்டி - கொரனா கிருமித்தொற்றிலிருந்து மீண்டுவருவதை பிரதிபலிக்கும் நம்பிக்கையின் சின்னம்" என்று போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்தது.

நாளையிலிருந்து நவம்பர் முதல் தேதி வரை ஒலிம்பிக் சுடர் ஜப்பான் அரும்பொருளகத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக்போட்டி COVID-19 நோய்த்தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10,000 பேர் அடுத்த ஆண்டு சுடரை ஏந்திச் செல்வார்கள் என்றும் பிறகு ஒலிம்பிக் ஜோதியில் சுடர் ஏற்றப்படும்.

போட்டிகளை வெற்றிகரமாக நடத்திமுடிக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

அடுத்த ஆண்டு, ஜூலை 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகளைத் தொடங்கிய நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்