Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் நட்சத்திரம் ஒசாக்கா விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவிப்பு

டென்னிஸ் நட்சத்திரம் ஒசாக்கா விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவிப்பு 

வாசிப்புநேரம் -
டென்னிஸ் நட்சத்திரம் ஒசாக்கா விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவிப்பு

படம்: AP Images

டென்னிஸ் நட்சத்திரம் நவோமி ஒசாக்கா (Naomi Osaka) விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

தற்போது நடந்து வரும் அமெரிக்கப் பொதுவிருது டென்னிஸ் தொடரில் அவர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

ஆட்டத்தில் தோல்வியடைந்த ஒசாக்கா கண்ணீர் விட்டு அழுதார்.

அதன் பிறகு, தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் மீண்டும் எப்போது விளையாடுவேன் என்று தெரியாது என்றும் அறிவித்தார்.

4 முறை Grand Slam விருதை வென்ற ஒசாக்கா, நேற்றைய ஆட்டத்தில் கனடாவின் பதின்மவயது வீராங்கனை லேலா பெர்னான்டஸிடம் (Leylah Fernandez) தோற்றார்.

செட் விவரம்: 5-7, 7-6, 6-4

மனநலப் பிரச்சினைகள் காரணமாக ஒசாக்கா பிரெஞ்சுப் பொதுவிருதுத் தொடரில் பாதியிலேயே விலகினார். விம்பிள்டன் தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

- AFP/dv 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்