Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

நேமாரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்த எங்களுக்குச் சக்தியில்லை: பிரேசில் அதிகாரிகள்

காற்பந்து நட்சத்திரம் நேமாரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை எங்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்று பிரேசில் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

காற்பந்து நட்சத்திரம் நேமாரின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை எங்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை என்று பிரேசில் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நேமார் புத்தாண்டை மிகவும் விமரிசையாகக் கொண்டாடவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாயின.

அந்தக் கொண்டாட்டத்தில் சுமார் 150 பேர் கூடவுள்ளனர்.

அந்தக் கொண்டாட்ட நடவடிக்கைக்கு பல தரப்புகளிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மன்காராடிபாவில் (Mangaratiba) உள்ள நேமாரின் சொகுசு இல்லத்தில் நடக்கவிருக்கும் அந்தக் கொண்டாட்டத்தை நிறுத்த எங்களுக்குப் போதிய பலமோ, சக்தியோ இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது சொகுசு இல்லத்தில் விருந்தினர்கள் வரத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன .

கொண்டாட்டத்தில் கைத்தொலைபேசிகளுக்கு அனுமதி இல்லையாம். அதனால் கொண்டாட்டத்தின் படங்கள் வெளியாகமல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

COVID-19 சூழலுக்கு இடையே பெருங்கூட்டத்தை நிகழ்ச்சிக்கு அழைப்பது தேவையில்லாதது என்று கருதப்படுகிறது.

உலக அளவில் நோய்த்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று.

அங்கு 190,000-க்கும் மேற்பட்டோர் மாண்டனர். சுமார் 7.5 மில்லியன் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்