Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

COVID-19: விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரபலக் காற்பந்து வீரர்களுக்கு நோய்த்தொற்று

COVID-19: விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரபலக் காற்பந்து வீரர்களுக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -
COVID-19: விடுமுறையைக் கழிக்கச் சென்ற பிரபலக் காற்பந்து வீரர்களுக்கு நோய்த்தொற்று

(படம்: REUTERS)

பிரான்ஸ் லீக் 1 காற்பந்து அணியான பாரிஸ் செயிண்ட் ஜெர்மான் (Paris Saint Germain) அணியின் முன்னணி வீரர்களுக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்னர் நேய்மாருக்கும், ஏங்கல் டி மரியாவுக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது அந்த அணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள இபிசா தீவுக்கு விடுமுறைக்காக அவர்கள் அனைவரும் சென்றதாகக் கூறப்படுகிறது.

பாரிஸ் செயிண்ட் ஜெர்மான் அணிக்கு இந்தப் பருவத்தின் முதல் ஆட்டம் வரும் 10ஆம் தேதி நடக்கவுள்ளது. அது தற்போது நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் லீக் 1-இல் உள்ள மற்ற சில அணிகளின் வீரர்கள் சிலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்