காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான பாலியல் பலாத்கார வழக்கு தோல்வி
பிரபலக் காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கு தோல்வியில் முடிந்துள்ளது.
பிரபலக் காற்பந்து விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (Cristiano Ronaldo) எதிராகத் தொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கு தோல்வியில் முடிந்துள்ளது.
ரொனால்டோ மீதான குற்றச்சாட்டைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்று அரசாங்கத் தரப்பு கூறியது.
நெவாடா மாநிலத்தைச் சேர்ந்த கேத்ரின் மயோர்கா கடந்த ஆண்டு ரொனால்டோ மீது பாலியல் பலாத்கார வழக்கைத் தொடுத்தார்.
2009ஆம் ஆண்டு, லாஸ் வேகஸ் ஹோட்டல் ஒன்றில், மயோர்காவிடம் ரொனால்டோ தகாத முறையில் நடந்துகொண்டதாக மயோர்காவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த புகாரில் கூறப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு குறித்து மயோர்காவின் வழக்கறிஞர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.