ரக்பி உலகக் கிண்ணப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்
ஜப்பான், ஸ்காட்லந்து ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெறவிருக்கும் உலகக் கிண்ண ரக்பி விளையாட்டுப் போட்டி திட்டமிட்டதுபோல நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஜப்பான், ஸ்காட்லந்து ஆகிய நாடுகளுக்கிடையே இடம்பெறவிருக்கும் உலகக் கிண்ண ரக்பி விளையாட்டுப் போட்டி திட்டமிட்டதுபோல நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஹகிபிஸ் (Hagibis) சூறாவளியால் அந்தப் போட்டி ரத்துசெய்யப்பட்டிருந்தது. பாதுகாப்புக் காரணங்களால் அந்த முடிவு முன்னதாக எடுக்கப்பட்டது.
யோக்கோஹாமா விளையாட்டரங்கை முழுமையாக ஆய்வுசெய்த பின்னர் அதிகாரிகள் போட்டிகளுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
போக்குவரத்துச் சீராக இல்லாதால் ரசிகர்களை முன்கூட்டியே அரங்கிற்கு வந்துவிடுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.