உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் இரு மாதங்கே உள்ள வேளையில் விளையாட்டரங்கை தயார் செய்கிறது ரஷ்யா.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புல்தரை ஜெர்மனியிலிருந்து ரஷ்யாவின் சமாரா என்ற நகரில் உள்ள அரங்கிற்கு இன்று கொண்டு வரப்பட்டது.
அரங்கின் புல்லை தயார் செய்ய, அதன் மீது செயற்கைச் சூரியனைப் போன்ற விளக்குகள் பொருத்தப்படும்.
புல் மண்ணோடு ஒட்டிக்கொள்ளும் வரை விளக்குகளிருந்து வெளிச்சம் பிரகாசமாக ஒளிரும்.
ரஷ்யாவில் உலகக் கிண்ணம் வரும் ஜூன் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.