Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்தாட்டக்காரர் சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்

அர்ஜென்ட்டினக் காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
காற்பந்தாட்டக்காரர் சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார்

(படம்: AFP/LOIC VENANCE)

அர்ஜென்ட்டினக் காற்பந்தாட்டக்காரர் எமிலியானோ சலா தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்களால் இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் குறித்து நடைபெற்ற விசாரணையின் போது அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

சலா, கடந்த மாதம் 21ஆம் தேதி பிரான்ஸின் மேற்குப் பகுதியில் இருந்து, கார்டிஃப் சிட்டிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது விமானம் காணாமற்போனது.

தீவிரத் தேடலுக்குப் பிறகு, விமானத்தின் சிதைவுகள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டன சலாவின் உடல் மீட்கப்பட்டது.

விரல் ரேகைகள் மூலம் உடல் சலாவுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சலா இறந்ததற்குக் காரணம் தலையிலும், உடலிலும் ஏற்பட்ட காயங்கள் தான் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டது.

சலாவுடன் பயணம் செய்த விமானியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

விமானம் இன்னும் கடலுக்கடியில் இருந்து மீட்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சலாவின் மரணம் தொடர்பான விசாரணை நவம்பர் மாதம் 6ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்