இன்று முதல், சிங்கப்பூர் Premier League காற்பந்து ஆட்டங்களை நேரடியாகக் காணச் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை 500க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
இன்றுமுதல், சிங்கப்பூர் Premier League காற்பந்து ஆட்டங்களைக் காணச் செல்வோர் எண்ணிக்கை, 500க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல், சிங்கப்பூர் Premier League காற்பந்து ஆட்டங்களைக் காணச் செல்வோர் எண்ணிக்கை, 500க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வியாழக்கிழமையிலிருந்து (19 ஆகஸ்ட்), அந்த எண்ணிக்கை, 1,000ஆக உயர்த்தப்படும் என சிங்கப்பூர் காற்பந்து சங்கம் தெரிவித்தது.
இதுவரை 100 பேர் வரை ஆட்டங்களை நேரடியாகக் காணச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
Sport Singapore அமைப்பு வெளியிட்ட வழிகாட்டிகளின்படி, பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதாகச் சங்கம் தெரிவித்தது.
காற்பந்தாட்டத்தைக் காணச் செல்வோர், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதை அல்லது, antigen விரைவுப் பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்பதைக் குறிக்கும் ஆவணங்களைக் காட்ட வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாள்களுக்குப் பிறகே, பார்வையாளர்களுக்குக் காற்ப்நது ஆட்டங்கள் நடைபெறும் அரங்குகளுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும்.